வீட்டில் தனித்திருந்த இளம் பெண் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Admin
வீட்டில் தனித்திருந்த இளம் பெண் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதி வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்ப பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

மாதகல் சேந்தான்குளம் பகுதியினை சேர்ந்த அன்ரன் உதயராஜ் டிலக்சி (வயது 22) என்ற பெண்ணே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் நேற்றுக் காலை கோவிலுக்குச் சென்றுள்ளனர்.
கோவிலில் இருந்த வீட்டிருந்கு வந்த அப் வீட்டின் அறையொன்றிற்குள் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அப் பெண்ணின் சடலம் இனங்காணப்பட்ட போது, வீட்டில் இருந்த பொருட்கள் அங்கும் இங்குமாக தூக்கி வீசப்பட்டுக் காணப்பட்டது, அங்கிருந்த சில பொருட்களும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவத்துள்ளனர். இத் தகவலை இளவாலை பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு, பிசேத பரிசோதணைக்காக யாழ்.போனா வைத்திய சாலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு