ஒரு தொகை வெடி பொருட்கள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
ஒரு தொகை வெடி பொருட்கள் மீட்பு.

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் வயல் காணியில் ஒன்றில் உள்ள கிணற்றுக்குள் இருந்து ஒரு தொகை வெடி பொருட்களை மக்கள் கொடுத்த முறைப்பாட்டினடிப்படையில் இன்று மாலை விசேட அதிரடிப்பi டயினர் மீட்டிருக்கின்றனர்.

மேற்படி வயல் காணியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றுக்குள் பொதி ஒன்று இருப்பதாக பொது மக்கள் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனடிப்படையில் இன்று மாலை விசே ட அதிரடிப்படையினர் மேற்

படி கிணற்றை சோதனையிட்டபோது அதற்குள் பொலித்தீன் பையில் கட்டப்பட்ட நிலையில் ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெடி பொருட்களுக்குள் ரீ.56 துப்பாக்கிக்கான ரவைகள், 60 மில்லி மீற்றர் மோட்டார்

குண்டுகள், ஆர்.பி.ஜீ றொக்கட் லோஞ்சர்கள் போன்றன உள்ளடங்கியிருப்பதாக விசேட அதிரடிப்படை யினர் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு