நிறைவெறியில் குழந்தையை துாக்கி வீசியவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்..! யாழ்.ஊா்காவற்றுறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
நிறைவெறியில் குழந்தையை துாக்கி வீசியவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்..! யாழ்.ஊா்காவற்றுறையில் சம்பவம்..

யாழ்.ஊா்காவற்றுறை- சின்னமாடு பகுதியில் உறவினா் வீட்டுக்கு நிறை மதுபோதையில் சென்று குழந்தையை துாக்கி வீசிய குடிகாரனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊா்காவற்று றை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தனது உறவினர் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற குறித்த சந்தேகநபர், அங்கு உறங்கிக்கொண் டிருந்த குழந்தையை தூக்கியுள்ளார். அதை அவதானித்த உறவினர்கள், அவரை திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குறித்த சந்தேகநபர், 

குழந்தையைத் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் காயமடைந்த குழந்தை, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர், ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு