யாழ்.நெல்லியடியில் ரவுடிகள் மோதல்..! 3 ரவுடிகள் கைது கஞ்சாவும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் ரவுடிகள் மோதல்..! 3 ரவுடிகள் கைது கஞ்சாவும் மீட்பு..

யாழ்.நெல்லியடி பகுதியில் கைகலப்பில் ஈடுபட்டிருந்த 3 இளைஞா்களை பொலிஸாா் கைது செய் துள்ள நிலையில், அவா்களிடமிருந்து ஒரு தொகை கஞ்சா போதை பொருளையும் பொலிஸாா் மீட் டிருக்கின்றனா். 

இந்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. நெல்லியடி ராஜாராமன் கிராம பகுதியில் இளைஞர்கள் சிலர் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் 

கைக்கலப்பில் ஈடுபட்டார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவருடைய உடமையில் இருந்து 10 கிராம் கஞ்சா போதை பொருளையும் பொலிசார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிசார் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு