வடமாகாணத்தின் முதல் பெண் ஆளுநா் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் நாளை பிற்பகல் 1 மணிக்கு பதவியேற்கிறாா்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தின் முதல் பெண் ஆளுநா் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் நாளை பிற்பகல் 1 மணிக்கு பதவியேற்கிறாா்..!

வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் நாளை பிற்பகல் 1மணிக்கு யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநா் அலுவலகத்தில் பதவியை பொறுப்பேற்கவுள்ளாா். 

இதன்மூலம் வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக பிஎஸ்எம் சார்ள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்கிறார். இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான 

திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், 

வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிருந்தார். கடந்த ஒன்றரை மாதங்களாக வடக்கு மாகாண ஆளுநர் பதவி 

வெற்றிடமாக இருந்து வந்த நிலையில், இவர் பதவியைப் பொறுப்பேற்றார்.இதேவேளை, வடக்கு மாகாணத்துக்கான நிதி ஆணை உள்ளிட்ட ஆவணங்களில் அவர் நேற்று கையொப்பமிட்டார். 

என்று அறியமுடிகிறது. கொழும்பிலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் மாகாண அதிகாரிகள் அவரை நேற்றுச் சந்தித்து அதிமுக்கியமான ஆவணங்களில் 

கையொப்பங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு