புதுவருட தினத்தில் சோகம்..! லொறியுடன் மோதி இரு இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே பலி, கிளிநொச்சியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
புதுவருட தினத்தில் சோகம்..! லொறியுடன் மோதி இரு இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே பலி, கிளிநொச்சியில் சம்பவம்..

கிளிநொச்சி- கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான். 

தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றிய பாரஊர்தி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை விநியோகித்து விட்டு திரும்பி வருகின்றவேளை 

எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரஊர்தியுடன் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச்சேர்ந்த 23வயதுடைய வரதராஜா ஜெமினன் மற்றும் யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச்சேர்ந்த 

29வயதுடைய செல்வநாயகம் அஜிந்தன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

பாரஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு