கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த ஹயஸ்..! 4 போ் படுகாயம், வவுனியாவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த ஹயஸ்..! 4 போ் படுகாயம், வவுனியாவில் சம்பவம்..

கல்குண்டாமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் குளத்தில் பாய்ந்து விபத்துக்குள் ளானதில் 4 போ் படுகாயமடைந்துள்ளனா். 

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றது.கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கயஸ்ரகவாகனம் கட்டுப்பாட்டை இழந்து 

அருகில் உள்ள குளத்தினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாக செயற்பட்டு வானில் இருந்து கீழே இறங்கியமையால் 

உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.குறித்த வானில் நான்கு பேர் பயணித்த நிலையில் சிறு காயங்களிற்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு