பேருந்தை வழிமறித்து பொலிஸார், இராணுவம் அதிரடி சோதனை..! கடத்தல்காரன் கைது, போதைப்பொருள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
பேருந்தை வழிமறித்து பொலிஸார், இராணுவம் அதிரடி சோதனை..! கடத்தல்காரன் கைது, போதைப்பொருள் மீட்பு.

செட்டிகுளம் பகுதியில் பொலிஸார், மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பில் முக்கிய கடத்தல்காரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற பஸ்ஸை நேற்று இரவு 10.30 மணியளவில் செட்டிகுளம் நகர் பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வழிமறித்த இராணுவம் மற்றும் ,பொலிஸார் அவ்விடத்தில் சோதனைகளை மேற்கொண்டபோது 

ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் முழங்காவில் பூநகரியை சேர்ந்த 24 வயதுடைய நபரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கடந்த நான்கு தினங்களிற்கு முன்னரே 

மத்திய கிழக்கு பகுதியில் இருந்து இலங்கை வந்ததுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந் நடவடிக்கையில் செட்டிகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப்குமார மற்றும் பொலிஸார், செட்டிகுளம் காலாட்படை இராணுவம் (MIR) போன்றோர் முறியடிப்பினை 

மேற்கொண்டிருந்தனர். மீட்கப்பட்ட ஹெரோயின் போதை பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என பொலிசார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு