நிறை மதுபோதையில் பொலிஸ் நிலையத்தின் முன்னால் இருந்து பொலிஸாரை திட்டிய பௌத்த பிக்கு கைது..!

ஆசிரியர் - Editor I
நிறை மதுபோதையில் பொலிஸ் நிலையத்தின் முன்னால் இருந்து பொலிஸாரை திட்டிய பௌத்த பிக்கு கைது..!

மஸ்கெலியா- நல்லதண்ணீர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நிறை மதுபோதையில் இருந்து பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்த பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

மேலும் இவ்விடயம் தொடர்பாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,கைது செய்யப்பட்ட பௌத்த குருவை கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சட்ட வைத்திய அதிகாரி பரிசோதித்தபோது 

அதிகளவான மது அருந்தியுள்ளதாக கூறியதற்கு அமைய இன்று 30ஆம் திகதியன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.அத்துடன் கைது செய்யப்பட்ட பௌத்த மதகுருவை விசாரணை நடத்தியதற்கு அமைய 

கடந்த காலங்களில் சிவனொளிபாதமலை அடிவாரத்தில் பௌத்த பிக்குவாக இருந்ததாகவும் அதன் பின்னர் மாத்தளை பகுதிக்கு சென்றதாகவும்,தற்போது வாழச்சேனை பகுதியில் உள்ள விகாரையில் உள்ளதாகவும் அங்கு தற்போது புனர்தாபனம் செய்ய உள்ளதென 

அதிகளவான டிக்கட் புத்தகங்கள் வைத்திருந்ததாக நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.இச்சம்பவமானது நேற்று 29 ஆம் திகதியன்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு