பொதுமக்கள் நிறைந்த பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் அடிதடி..! 3 ரவுடிகள் காயம், ஆட்டோ தீக்கிரை..

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள் நிறைந்த பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் அடிதடி..! 3 ரவுடிகள் காயம், ஆட்டோ தீக்கிரை..

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் இரு ரவுடி கும்பல்களுக்கிடையில் இடம்பெற்ற மோத லில் 3 ரவுடிகள் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டி ஒன்று எாித்து நாசமாக்கப்பட்டி ருக்கின்றது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றுமொரு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.குறித்த இரு குழுவினரும் கடையொன்றில் குளிர்பாணம் அருந்தச் சென்றபோது, ஏற்பட்ட வாய்த்தர்க்கமே 

மோதலாக மாறியுள்ளது.இந்த சம்பவத்தில் 3 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டியொன்று தீயிட்டு கொளுத்தப்பட்டதில் சாம்பலாகியுள்ளது.

இந்த சம்பவத்தால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனினும் மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த நபர்கள் மதுபோதையில் இருந்தமையினால் 

இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு