கோப்பாய், நீர்வேலி பகுதிகளில் வாழை குலை கள்ளர்கள் அட்டகாசம் அதிகரிப்பு..! பொலிஸார் வேடிக்கை..

ஆசிரியர் - Editor I
கோப்பாய், நீர்வேலி பகுதிகளில் வாழை குலை கள்ளர்கள் அட்டகாசம் அதிகரிப்பு..! பொலிஸார் வேடிக்கை..

யாழ்.கோப்பாய் பகுதியில் வாழைக்குழை களவு அதிகரித்து வருவதால் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இரவு கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகில் உள்ள தில்லையம்பலம் பாமதேவன் என்பவரது வாழைத் தோட்டத்தில் 

10 இற்கு மேற்பட்ட வாழைக்குழைகள் வெட்டப்பட்டு வீதிக்கு கொண்டு வந்தவேளை சனங்களின் நடமாட்டத்தைக் கண்டு வீதியிலே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

அந்தப் பகுதியைச் சேந்தவர்களே களவுகளில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் வாழைக்குழை களவுகள் தொடர்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு