முல்லைத்தீவு- நாயாற்றில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி..! ஒருவர் சடலமாக மீட்பு, மற்றயவரை காணவில்லை..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- நாயாற்றில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி..! ஒருவர் சடலமாக மீட்பு, மற்றயவரை காணவில்லை..

முல்லைத்தீவு- நாயாறு நீரேரி பகுதியில் குளிப்பதற்காக சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கும் நிலையில், உயிரிழந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளபோதும், மற்றயவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். 

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. நாயாறு நீரேரி பகுதியில் தந்தையும் மகனும் குளிப்பதற்காக சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல்போயிருக்கின்றனர். இந்நிலையில், கடற்படையினர் விரைந்து வந்து 

காணாமல்போனவர்களை தேடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். எனினும் மற்றயவர் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டுவருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு