பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பணம் மற்றும் வங்கி அட்டைகள் திருட்டு..! தாய், மகள் சந்தேகத்தில் கைது. வவுனியாவில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பணம் மற்றும் வங்கி அட்டைகள் திருட்டு..! தாய், மகள் சந்தேகத்தில் கைது. வவுனியாவில் சம்பவம்.

கிடாச்சூரியிலிருந்து வவுனியாவுக்கு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பணம் மற்றும் வங்கி அட்டைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தாயும், மகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற பஸ்ஸில் சென்ற பெண்ணின் பையிலிருந்த மணிப்பேசினை எடுத்து அதிலிருந்த பணம் 

மற்றும் இலத்திரனியல் அட்டைகளையும் திருடர்களால் திருடி செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய பெண் தனது பை திறக்கப்பட்டுள்ளதை பார்த்தபோது ப

ணப்பை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் 

குறித்த பெண்ணிற்கு அருகே பஸ்ஸில் நின்று வந்த தாய், மகள் இருவரையும் சந்தேகத்தில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதுடன் 

மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு