கடற்படை அதிகாரியை வழிமறித்து கொள்ளை..! சந்தேகத்தின் பெயரில் இளைஞனை கைது செய்ய முயற்சி, நஞ்சருந்திய இளைஞன்..

ஆசிரியர் - Editor I
கடற்படை அதிகாரியை வழிமறித்து கொள்ளை..! சந்தேகத்தின் பெயரில் இளைஞனை கைது செய்ய முயற்சி, நஞ்சருந்திய இளைஞன்..

விமானப்படை சிப்பாய் மற்றும் குடும்பத்தினரை வ ழிமறித்து கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இளைஞன் ஒருவனை கை து செய்ய முயற்சிக்கப்பட்டபோது குறித்த இளைஞ ன் நஞ்சை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இன்று அதிகாலை ஊரெழு பகுதியில் விமானப்ப டை அதிகாரியை வழிமறித்த கொள்ளை கும்பல் ஒன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டிருந் தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி ய பொலிஸார் முறைப்பாட்டாளர் வழங்கிய 

அடையாளத்தின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரைத் தேடி உரும்பிராய் தோட்டப்பகுதிக்கு தேடிச் சென்ற போது, சந்தேகநபர் தோட்டத்திலிருத்த ரவுண்டப் என்ற கிருமி நாசினியை அருந்தி உயிர்மாய்ப்புக்கு முயன்றார்.

அவர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சந்தேகநபர் பல கொள்ளைச் சம்பவ்வங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 

சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பித்தவர். இரண்டு கொள்ளைச் சம்பவங்களையும் ஒரே கும்பலே செய்திருக்க முடியும் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன

 என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு