யாழில் கல்யாணப் புறோக்கர் நையப்புடைக்கப்பட்டார்!! பட்டதாரி மாப்பிளைக்கு நடந்தது என்ன?

ஆசிரியர் - Editor II
யாழில் கல்யாணப் புறோக்கர் நையப்புடைக்கப்பட்டார்!! பட்டதாரி மாப்பிளைக்கு நடந்தது என்ன?

யாழில் கல்யாணப் புறோக்கர் நையப்புடைக்கப்பட்டார்!! பட்டதாரி மாப்பிளைக்கு நடந்தது என்ன?

யாழ் உரும்பிராய் பகுதியில் கல்யாணப் புறோக்கர் ஒருவர் திருமண நிச்சயதார்த்த நிகழ்வின் போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக பட்டதாரி எனத் தெரிவித்து யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்ற இளைஞனை பட்டதாரியான பெண் ஒருவருக்கு நிச்சயம் செய்து முடித்துள்ளார். நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்று முடியும் தருணத்திலேயே புறோக்கரின் பொய்ப் பித்தலாட்டம் பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.
மாப்பிளைவீட்டார் டிப்ளோமா பயின்றவர் எனத் தெரிவித்தே புறோக்கருக்கு குறிப்பை கொடுத்ததாகவும் புறோக்கரே பட்டதாரி என பெண் வீட்டாருக்கு தெரிவித்து சம்மந்த கலப்புவரை இரு குடும்பத்தவர்களையும் கொண்டு வந்துள்ளார்.

மாப்பிளை பட்டதாரி இல்லை என பெண் வீட்டார் சம்மந்தக் கலப்பில் அறிந்தவுடன் இது தொடர்பாக அங்கு வைத்து புறோக்கரிடம் கேட்டுள்ளனர்.

31 வயசு பொம்பிளைக்கு இனி எங்க பட்டதாரி பெடியனைத் தேடுவது என புறோக்கர் தினாவெட்டாக அவர்களுக்கு கூறிய போது பெண்ணின் அண்ணன் மற்றும் உறவினர்கள் இருவரால் புறோக்கர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான புறோக்கர் உரும்பிராய் வீதி வழியாக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்த போது அவரை மாப்பிளையின் உறவினர்கள் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றதாகத் தெரியவருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு