எந்த கணக்கில் 2 கோடி? சிறீதரன் கண்டறிய சிவசக்தி ஆனந்தனிற்கு சவால்!

ஆசிரியர் - Admin
எந்த கணக்கில் 2 கோடி? சிறீதரன் கண்டறிய சிவசக்தி ஆனந்தனிற்கு சவால்!

இலங்கை அரசிடம் இரண்டு கோடி பணம் பெற்றிருக்கவில்லையென விடாப்பிடியாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்து தெரிவித்துள்ளார். 

அத்துடன் அதனை தனது எந்த வங்கி கணக்கில் வைப்பிலிட்டதென்ற விபரத்தை வெளிப்படுத்த முடியுமாவென மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனிற்கு சவாலும் விடுத்துள்ளார்.

தனது வீட்டிற்கு சென்ற ஊடகவியலாளர்களை சந்தித்த சிறீதரன் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். 

அத்துடன் அவர் தாம் சிலபல காரணங்களிற்காகவும் கட்சி தலைவர் மீதான விசுவாத்தாலுமே வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்ததாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசிடம் நாம் இரண்டு கோடி வாங்கி பொக்கட்டினுள் போட்டுவிட்டதாக மக்கள் சிந்திக்கின்றனர்.மாவை தான் பணம் பெற்றதாக எங்கும் ஊடகங்களிடமும் சொல்லவில்லை.வெளிவந்திருந்த பட்டியல்கள் அவர் ஊடகங்களிடம் சொன்னதல்ல. ஏன் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கூட அதனை வாங்கவில்லையெனவும் தெரிவித்தார்.

தேசியவிடுதலை,இனவிடுதலைக்காக தான் தாம் அமைதி காப்பதாக தெரிவித்துள்ள அவர் இனி பொறுத்திருக்கப்போவதில்லையெனவும் மேலும் தெரிவித்தார்.யாழ்.ஊடக அமையத்தில் அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டு கோடி விவகாரத்தை சுரேஸ்பிறேமச்சந்திரன் போட்டுடைத்திருந்தார்.

அத்துடன் மக்களிடையே கூட்டமைப்பு 30 கோடிக்கு சோரம் போனமை கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ள நிலையில் சிறீதரன் பதிலுக்கு ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் மற்றும் அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் செய்த கடந்த கால செயற்பாடுகளை அம்பலப்படுத்தப்போவதாக தெரிவித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு