தான் சிறந்த பௌத்தன் என்பதால் இனங்களையும் மதங்களையும் அழிக்க மாட்டாராம் என்கிறார் சஜித்

ஆசிரியர் - Admin
தான் சிறந்த பௌத்தன் என்பதால் இனங்களையும் மதங்களையும் அழிக்க மாட்டாராம் என்கிறார் சஜித்

'நான் ஒரு சிறந்த பௌத்தன். பௌத்த கொள்கையை, கோட்பாட்டை சரியாக பின்பற்றும் பௌத்தன். எனவே இனத்தை, மதத்தை வைத்து மதங்களை, இனங்களை ஒருபோதும் அழிக்க முடியாது. புத்த பெருமான் ஒருபோதும் இனங்களை, மதங்களை வைத்து இன, மத அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடாது என தெளிவாக கூறியுள்ளார்'

இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரரேமதாசா கூறினார். இன்று (08) காலை 11 மணிக்கு மன்னாரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அனைத்து மக்களையும் இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து மீண்டும் அவர்களின் இடங்களில்  மீள்குடியேற்றுவேன் எனவும் கூறினார். 

தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சராக இருந்து தமிழர்களின் சைவக் கோயில்களை ஆக்கிரமித்து பௌத்த விகாரைகளை அமைத்து வருவதுடன் தமிழர்களின் பூர்வீக நிலங்களைப் படை முகாம்களுக்காக சுவீகரிக்கும் சஜித் பிரேமதாசவின் இக்கூற்று நகைப்புக்கிடமானது என மன்னார் மாவட்ட தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, சஜித் பிரேசமதாசா மன்னாரில் மேலும் உரையாற்றுகையில், 

தலைமன்னார், பேசாலை, சிலாபத்துறை துறைமுகங்களை அபிவிருத்தி செய்வேன். புத்தளம் வீதியை மன்னாருடன் வில்பத்து காட்டுக்கு பாதிப்பின்றி இணைப்பேன். தலைமன்னாரிலிருந்து திருகோணமலை வரையிலான நான்குவழிப் பாதையை அபிவிருத்தி செய்வேன்.

பாலர் பாடசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவேன். அதில் கடமைபுரியும் உதவி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பாலர்பாடசாலை ஆசிரியர்களுக்கும் அரச சம்பளத்தை வழங்குவேன். வௌ;வேறாக கட்டிடங்கள். பிள்ளைகள் விளையாடும் சிறுவர் பூங்கா மற்றும் பகல் போசனத்தை இலவசமாக வழங்குவேன்.

ஒருமித்த இலங்கை நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் இன, மத பேதமின்றி வழங்குவேன் என்பதை மன்னார் மண்ணில் வைத்து உறுதியாக கூறுகிறேன். இனவாதத்தை பரப்புவோருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க நான் பின்நிற்க மாட்டேன்;. – என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு