விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி மீட்பு

ஆசிரியர் - Admin
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி மீட்பு

விடுதலைப் புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி ஒன்று இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணி உரிமையாளர் ஒருவர் விவசாய நடவடிக்கைகாக காணி ஒன்றை துப்பரவு செய்த போதே குறித்த கருவி மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கருவியில் த.வி.பு 055 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் இதுபோன்ற நீர் எதிர்ப்பு மகெலன் கருவிகளை கடல்வழி பயணங்களின் போது பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் 2009 ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் தரை மற்றும் கடல்வழி பயணத்தின்போது மற்றும் ஈரூடாக தாக்குதல் இலக்குகளின் கணிப்பீட்டை பெறுவதற்கும் குறித்த கருவிகளை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பகருவி ஒன்றே இன்று மீட்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு