சாய்ந்தமருதுவில் மஹிந்த கலந்துகொண்ட கூட்டத்தில் இரு முஸ்லிம் பெண்கள் கைது..! தீவிரவாதிகள் என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
சாய்ந்தமருதுவில் மஹிந்த கலந்துகொண்ட கூட்டத்தில் இரு முஸ்லிம் பெண்கள் கைது..! தீவிரவாதிகள் என சந்தேகம்..

அம்பாறை- சாய்ந்தமருது பகுதியில் எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தில் நடமாடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவா்கள் நேற்றய தினமே சவுதியிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளனா். 

அம்பாறை சாய்ந்தமருதுப் பகுதியில் இன்றைய தினம் பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.அதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் 

மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று மாலை 4 மணியளவில் பிரசார கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ள மேடைக்கு அருகில் இரு பெண்கள் முகத்தை மூடிய பர்தா 

அணிந்து நடமாடியுள்ளனர்.குறித்த பெண்கள் இருவரும் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாகவிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட ஆரம்பக்ககட்ட விசாரணையின் போது இவர்கள் நேற்றைய தினம் தான் சவுதி அரேபியாவிலிருந்து வந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட 

குண்டுத் தாக்குதலின் போது சாய்ந்தமருதுப் பகுதியிலும் தற்கொலைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு