தொடா் வேலை நிறுத்தத்தில் குதித்த பல்கலைகழக ஊழியா்கள்..! இன்று காலை பேரணியையும் நடாத்தினா்..

ஆசிரியர் - Editor I
தொடா் வேலை நிறுத்தத்தில் குதித்த பல்கலைகழக ஊழியா்கள்..! இன்று காலை பேரணியையும் நடாத்தினா்..

சம்பள அதிகாிப்பு உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை முன்வைத்து யாழ்.பல்கலைகழக ஊழி யா்கள் சங்கம் நடாத்தும் தொலை வேலை நிறுத்த போராட்டத்தின் அடையாளமாக இன்று காலை பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 

யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் அரசினதும் செயற்பாடுகளைக் கண்டித்தும் தமக்கான நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடந்த 10 நாட்களா தொடர்ச்சியாக 

வேலை நிறுத்த மேற் கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று காலை அடையாள நடைபவணி போராட்டம் நடத்தினர்.யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்க்குள் இருந்து பேரணியாக வந்த ஊழியர்கள் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தனர். 

அங்கிருந்து தொடர்ந்து பரமேஸ்வரா சந்திக்கு சென்ற நடைபவணி பலாலி வீதியின் நடுவில் நின்று தமது அடையாள போராட்டத்தை நடத்தினர்.சுமார் அரைமணி நேரம் வீதியின் நடுவில் நின்று போராட்டம் நடத்தியதால் பலாலி வீதி போக்குவரத்தில் 

சிறிது நெருக்கடி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு