பளை வைத்தியசாலை பொறுப்பதிகாாி மருத்துவா் சிவரூபன் அதிரடியாக கைது..! இராணுவம் கைது செய்ததாக தகவல்..

ஆசிரியர் - Editor I
பளை வைத்தியசாலை பொறுப்பதிகாாி மருத்துவா் சிவரூபன் அதிரடியாக கைது..! இராணுவம் கைது செய்ததாக தகவல்..

பளை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாாியும், யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்னாள் சட்டவைத்திய அதிகாாியுமான சி.சிவரூபன் நேற்று நள்ளிரவு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

நேற்றிரவு 10 மணியளவில், பளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் தங்கும் விடுதிக்கு சிவில் உடையில் வந்தவர்களால் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இராணுவத்தினரால் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக 

அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள போதும், சிவில் உடையில் வந்த பாதுகாப்பு தரப்பினராலேயே அழைத்து செல்லப்பட்டதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களின் முன்னர் பளையில் 

முன்னாள் போராளியொருவர் ஆயுதங்களுடன் கைதாகிய விவகாரத்தில், ஏற்கனவே அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு