ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது பதவியை துாக்கி எறியாதவருக்கு எழுக தமிழ் ஒரு கேடா..? கேட்டது ஆனந்த சங்காி..

ஆசிரியர் - Editor I
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது பதவியை துாக்கி எறியாதவருக்கு எழுக தமிழ் ஒரு கேடா..? கேட்டது ஆனந்த சங்காி..

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதே சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சா் பதவியை துாக்கி வீசியிருக்கவேண்டும். அதனை செய்யாமல் எழுக தமிழ் நடாத்தி என்ன பயன்? என தமிழா் விடுதலை கூட்டணியின் தலைவா் வி.ஆனந்தசங்காி கேள்வி எழுப்பியுள்ளாா். 

தமிழா் விடுதலை கூட்டணியின் யாழ்.அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

வடக்கு மாகாண சபை ஆட்சியில் இருந்த போது அதில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த நிர்வாகத்திலேயே இந்த குற்றச் சட்டு வைக்கப்பட்டது.

அப்படியானால் முதலில் அவர் தனது பதவியிலிருந்து விலகி நீதியான விசாரணைக்கு இடமளித்திருக்க வேண்டும்.விசாரணைக்கு பதவியில் இருந்து ஒதுங்கி ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பார்.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் செய்த தவறினால் இப்போது நீதிமனரத்தின் ஊடாக அவரது நிர்வாக பிழைகள் வெளியில் வந்துள்ளன.இவ்வற்றை செய்யாமல் விட்டுவிட்டு தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க போகின்றோம் என 

எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.இவர்களின் பேரணியால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு