சிலாபத்தில் சுற்றிவளைப்பு 10 தமிழா்கள் கைது..! கடல்வழியாக வெளியேற முயற்சித்தபோது சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சிலாபத்தில் சுற்றிவளைப்பு 10 தமிழா்கள் கைது..! கடல்வழியாக வெளியேற முயற்சித்தபோது சம்பவம்..

சிலாபம் பகுதி ஊடாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேரை பொலிஸாா் கைது செய்திருக்கின்றனா். 

சந்தேகத்திற்குரிய முறையில் சிலர் பயணிப்பதாக கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 

அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறிய ரக லொறி ஒன்றில் சிலாபம், இரணவில வீதியில் பயணித்து கொண்டிருந்தபோது 

இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஆதரவு வழங்கிய லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 20 - 40 வயதுடைய தமிழர்களாகும். லொறியின் சாரதி மற்றும் உதவியார்கள் 

மாரவில மற்றும் தொடுவாவ பிரதேசத்தை சேர்ந்த சிங்களவர்களாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு