மிகுதி காசுக்கு இனிப்பு வழங்கும் கடைக்காரா்களுக்கு ஆப்பு..! பொதுமக்களிடம் வா்த்தக சங்கம் விடுத்துள்ள கோாிக்கை..

ஆசிரியர் - Editor I
மிகுதி காசுக்கு இனிப்பு வழங்கும் கடைக்காரா்களுக்கு ஆப்பு..! பொதுமக்களிடம் வா்த்தக சங்கம் விடுத்துள்ள கோாிக்கை..

வா்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும்போது மிகுதி பணத்திற்கு ரொபி கொடுத்தால் உடனடியாக தம்மிடம் முறைப்பாடு செய்யுமாறு வவுனியா மாவட்ட வா்த்தக சங்கம் பொதுமக் களிடம் கோாிக்கை விடுத்துள்ளது. 

வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வர்த்தக நிலையங்களில் சில்லறை நாணயங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் அரச மற்றும் தனியார் வங்கி முகாமையாளர்களுடன் வர்த்தக சங்கத்தினர் கலந்துரையாடி சில்லறை நாணயங்களை பெறுவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா வர்த்தக சங்கத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன், சில்லறை நாணயங்கள் தேவைப்படும் வர்த்தகர்கள் வர்த்தக சங்கத்தின் காரியாலத்தில் அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, 

இதற்கு பின்னரும் வர்த்தக நிலையங்களில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்பட்டால் வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு செய்யுமாறு வர்த்தக சங்கத்தினர் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு