அதிகாலையில் நடந்த விபத்து..! ஒருவா் பலி, ஒருவா் படுகாயம். முல்லைத்தீவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் நடந்த விபத்து..! ஒருவா் பலி, ஒருவா் படுகாயம். முல்லைத்தீவில் சம்பவம்..

முல்லைத்தீவு- சிலாவத்தை பகுதியில் கடலுணவு கொண்டு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். மேலும் ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொக்குளாய் - முகத்துவாரம் பகுதியினை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி சென்றபோது வீதியினை விட்டு விலகி 

தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .இந்நிலையில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு