இலங்கையில் திருமணமான அன்றே கணவனுக்கு துரோகம் செய்த புதுமணப்பெண்

ஆசிரியர் - Editor II
இலங்கையில் திருமணமான அன்றே கணவனுக்கு துரோகம் செய்த புதுமணப்பெண்

வவுனியாவில் கணவரை பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார் என முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மஹறம்பைக்குளம் பகுதியில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் மணமகனுக்கும் மஹறம்பைகுளத்தை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்தவுடன், சிலவாரங்கள் இலங்கை தங்கியிருந்த மணமகன் மீண்டும் தொழிலுக்காக சர்வதேசம் சென்றுள்ளார்.

கணவர் வெளிநாட்டிற்கு சென்றதன் பின்னர் திருமண வேளையின் போது வாடகைக்கு அமர்த்தப்பட்ட மகிழுர்தி ஒன்றின் சாரதியுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

சுமார் 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில், குறித்த மணப்பெண், சாரதியுடன் சென்று கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றார்.

எனினும் குறித்த பெண்ணை வெளிநாட்டிற்கு அழைப்பதற்கான ஆயத்தங்களை திருமணம் முடிந்த மணமகன் மேற்கொண்டு வருகின்றார்.

குறித்த பெண்ணின் நடவடிக்கையை கேள்வியுற்ற மணகன் மற்றும் அவரின் குடும்ப தரப்பினர் உளநல பாதிப்பு மற்றும் பண மோசடி செய்துள்ளதாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

வவுனியா காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு