முதுகு பக்கத்தால் பாய்ந்த துப்பாக்கி ரவை இதயத்தை தாக்கி மரணம்.! சடலம் ஒப்படைப்பு.

ஆசிரியர் - Editor I
முதுகு பக்கத்தால் பாய்ந்த துப்பாக்கி ரவை இதயத்தை தாக்கி மரணம்.! சடலம் ஒப்படைப்பு.

பொலிஸாருடைய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனின் முதுக்பிறமாக பாய்ந்த துப்பாக்கி தோட்டா முதுகெலும்பில் பட்டு திரும்பி இதயத்தை தாக்கியுள்ளது. என பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

மானிப்பாய் – இணுவில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞன் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 3 மணியளவில் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த நீதிவான், கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தவிட்டார்.

இளைஞனின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை, முதுகெலும்பில் பட்டு திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு