கிராமத்திற்குள் நுழைந்து பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த மா்மநபா்..! பாலியல் மாத்திரைகளுடன் கைது..

ஆசிரியர் - Editor I
கிராமத்திற்குள் நுழைந்து பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த மா்மநபா்..! பாலியல் மாத்திரைகளுடன் கைது..

கலவானை பகுதியில் பகுதியில் பல கிராம பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சந்தேகநபா் கலவான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

கலவானை பிர­தான பஸ் நிலை­யத்தில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறையில் நட­மா­டிய குறித்த நபரின் கைப்­பொ­தி­யினை பொலிஸார் பரி­சோ­த­னைக்குட்­ப­டுத்­தினர்.

இதன்­போது இறப்­ப­ரினால் செய்­யப்­பட்ட செயற்கை ஆணு­றுப்பு மற்றும் 25 கருத்­தடை சாத­ னங்கள் என்­பன கைப்பற்றப்பட்டதாகவும், 

குறித்த நபர் காலி அக்­குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்­தவர் எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.கடந்த சில மாதங்­க­ளாக கல­வானை பிர­தே­சத்தின் பல்­வேறு கிராமங்­க­ளிலும் 

பல பெண்­களை பாலியல் பலாத்­காரம் செய்ய முயற்­சிக்கும் நப­ரொ­ருவர் கிரா­மங்­களில் உலா­ விவ­ரு­தா­கவும்,பெண்­களை பலாத்­காரம் செய்ய முயற்­சிக்கும் வேளையில் 

அப்­பெண்கள் அச்­சத்தில் சத்­த­மிடும் போது சூட்­சு­ம­மான முறையில் அந்­நபர் ஓடி மறை­வ­தாக பிர­தே­ச­மெங்கும் தகவல் பரவி­யி­ருந்­தது.

இந்­நி­லை­மையில் சம்­ப­வ­தினம் இந்­நபர் கைதுசெய்­யப்­பட்­ட­வுடன் சந்­தேக நபரை அடை­யாளம் காண்­ப­தற்­காக உளப் பாதிப்­புக்­குள்­ளான பெண்கள் சிலர் வர­வ­ழைக்­கப்­பட்ட போது, 

சம்­ப­வங்­க­ளுடன் தொடர்புடைய உரிய நபர் இவர்தான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நபர் குறித்த மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு