56 வயது வபோதிபரை கைது செய்ய 100ற்கு மேற்பட்ட பொலிஸாா்..! சாவகச்சோி சந்தைக்குள் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
56 வயது வபோதிபரை கைது செய்ய 100ற்கு மேற்பட்ட பொலிஸாா்..! சாவகச்சோி சந்தைக்குள் பதற்றம்..

56 வயது நபரை கைது செய்வதற்காக சுமாா் 100ற்கு மேற்பட்ட பொலிஸாா் சவகச்சோி சந்தைக்குள் நுழைந்தமையினால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. 

சந்தைக்குள் நின்ற 56 வயது நபரைக் கைது செய்த பொலிஸார், அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சந்தையில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்னொரு நபருடன் முரண்பட்டுள்ளார். 

சிறிது நேரத்தில் மூன்று வாகனங்களில் சந்தைக்குள் வந்த பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு