SuperTopAds

இரணைமடு முகாமைக் கைவிட்டு வெளியேறியது இராணுவம்!

ஆசிரியர் - Editor I
இரணைமடு முகாமைக் கைவிட்டு வெளியேறியது இராணுவம்!

இரணைமடு குளத்திற்கு அருகில் அமைத்திருந்த முகாமை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் அமைந்திருந்த விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 

இரணைமடுக் குளத்திற்கு சுற்றுலா வரும் பிரயாணிகளிற்கு சிற்றுண்டிச் சாலை அமைத்து வியாபாரமும் செய்து வந்த நிலையில் குறித்த முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடையும் நிலையில் குறித்த பகுதி நீர்பாசன திணைக்களத்திற்கு அத்தியாவசியமான பகுதியாக காணப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். 

எதிர்வரும் காலங்களில் இரணைமடு குளத்தினை பார்வையிட அனுமதிக்கப்பட்ட பகுதியில் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி செல்லலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.