கல்முனையில் பதற்றம்..! பொலிஸாா், இராணுவம் குவிப்பு, மோதலை உருவாக்க முஸ்லிம்கள் முஸ்தீபு..

ஆசிரியர் - Editor I
கல்முனையில் பதற்றம்..! பொலிஸாா், இராணுவம் குவிப்பு, மோதலை உருவாக்க முஸ்லிம்கள் முஸ்தீபு..

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயா்த்தக்கோாி 5ம் நாளாக உணவு தவிா்ப்பு போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் அந்த உணவு தவிா்ப்பு போராட்டத்தை சீண்டும் வகையில் பேரணி ஒன்றை முஸ்லிம்கள் முயற்சித்ததால் கல்முனை பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது. 

கல்முனை எம்.பி, ஹரீஷின் ஏற்பாட்டில் நடக்கவுள்ள இந்த பேரணி ஏற்பாடுகளையடுத்து, அங்கு இராணுவம், அதிரடிப்படை, பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர், வெளியிடங்களிலிருந்து வாகனங்களில் அழைத்து 

வரப்படுபவர்களையும் இணைத்து சில ஆயிரக்கணக்கானவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. தமிழ் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடக்குமிடத்திற்கு முன்பாக இந்த பேரணி செல்லவுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு