இஸ்லாம் மதத்தை கைவிட்டால் அவா்களை படுகொலை செய்யுங்கள்..! அரசு வெளியிடும் பாட புத்தகத்தில் உள்ளதாம்..

ஆசிரியர் - Editor I
இஸ்லாம் மதத்தை கைவிட்டால் அவா்களை படுகொலை செய்யுங்கள்..! அரசு வெளியிடும் பாட புத்தகத்தில் உள்ளதாம்..

இஸ்லாம் மதத்தை கைவிடும் நபா்களை கொலை செய்யவேண்டும். என பாடசாலை மாணவா்களுக்கான இஸ்லாமிய மதம் தொடா்பான பாட புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாகவும், அந்த புத்தகம் அரசாங்கத்தினால் வெளியிடப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கின்றது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தெரிவு குழுவில் சாட்சி வழங்கிய ரிஸ்வின் இஸ்மாயித் என்பவரால் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான விடயம் பாடசாலை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் சஹ்ரான் போன்ற தீவிரவாதிகள் உருவாகுவதற்கு சிரியா அல்லது வேறு நாட்டின் ஆதரவு அவசியம் இல்லை 

என அவர் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டில் தான் இஸ்லாம் மதத்தில் இருந்து விலகியதாகவும், அதன் காரணமாக மரண அச்சுறுத்தல் உட்பட விடுக்கப்பட்டதாக ரிஸ்வின் இஸ்மாயித் நாடாளுமன்ற தெரிவு குழுவில் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு