கோர விபத்து..! பாடசாலை மாணவா்கள் 4 போ் உள்ளிட்ட 5 போ் படுகாயம்.. துாக்கி வீசப்பட்ட முச்சகரவண்டி..

ஆசிரியர் - Editor I
கோர விபத்து..! பாடசாலை மாணவா்கள் 4 போ் உள்ளிட்ட 5 போ் படுகாயம்.. துாக்கி வீசப்பட்ட முச்சகரவண்டி..

பாடசாலை மாணவா்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியும், பயணிகள் பேருந்தும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவா்கள் 4 போ் உள்ளடங்கலாக 5 போ் படுகாயமடைந்துள்ளனா். 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் வவுனியா சிதம்பரபுரம்- கோவில்குளம் இடையில் இடம்பெற்றுள்ளது. வவுனியா பகுதியிலிருந்து பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றியவாறு கோவில்குளம் 

சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும் சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸூம் கோவில்குளத்தில் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு மாணவர்களும் 44 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு