மைத்திாி- ரணில் இடையில் இணக்கம்..! சுமுகமாக கூடியது அமைச்சரவை..

ஆசிரியர் - Editor I
மைத்திாி- ரணில் இடையில் இணக்கம்..! சுமுகமாக கூடியது அமைச்சரவை..

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு உண்டாகியுள்ளதாகவும் இதனடிப்படையிலேயே இன்று அமைச்சரவை சுமுகமாக கூடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த இணக்கத்திற்கான மத்தியஸ்தர்களாக, அமைச்சர்கள் ராஜித்த சேனாரத்னவும், ரவி கருணாநாயக்கவும் ஈடுபட்டுள்ளார்களெனவும், இதன் பிரதிபலனாகவே, 

இன்றைய தினம் (18.06.19) அமைச்சரவைக் கூட்டம் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த இணக்கப்பாடு, அரசாங்கத்தை நல்லபடியாகத் தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு 

வழிசமைக்குமென, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு கட்டமாகவே, இன்றை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. 

ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் காரணமாக, கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி கலந்துகொண்டு இருக்கவில்லை. 

எவ்வாறாயினும், இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம், சற்று காரசாரமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் குறித்துக் கண்டறிவதற்காக 

நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி, பின்னர் அந்தத் தீர்மானத்திலிருந்து பின்வாங்கியிருந்தார். 

அதன்படி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வும், இன்று பிற்பகல் 2 மணிக்குக் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு