பெறாமகளை துடிக்க..துடிக்க கழுத்தறுத்து கொலை செய்தது ஏன்..! 60 கொலைகாரன் கூறிய கதை..

ஆசிரியர் - Editor I
பெறாமகளை துடிக்க..துடிக்க கழுத்தறுத்து கொலை செய்தது ஏன்..! 60 கொலைகாரன் கூறிய கதை..

எனக்கு சொந்தமான காணியை என் தம்பி அபகாித்துவிட்டாா். காணி அபகாித்தது மட்டுமல்லாமல் தம்பியின் பிள்ளைகள் என்னை தொடா்ந்தும் கேலி செய்துவந்தனா். 

இதனால் பொறுமையிழந்து பெறாமகளை கொலை செய்ததுடன் பெறாமகன் மீது கத்தியால் குத்தினேன் என இருபாலை கொலை சம்பவத்துடன் தொடா்புடைய 60 கொலைகாரன் கூறியுள்ளாா். 

காணி பிணக்கு வாய்த்தா்க்கத்தில் முடிந்த நிலையில் யாழ்.இருபாலை பகுதியில் இளம் பெண் துரத்தி சென்று கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், பெண்ணின் சகோதரன் கத்தியால் குத்தப்பட்டாா். 

இந்நிலையில் கத்தியுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 60 வயதான வேலன் கிருஸ்ணன் என்ற கொலைகாரன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் 

எனக்கு சொந்தமான காணியை தம்பி குடும்பம் ஏமாற்றி தமக்கு சொந்தமாக்கி விட்டார்கள். இதனால் என் குடும்பத்திற்குள்ளும் பிரச்சனை. 

பிரச்சனை பெரிதாகி, மனைவி, பிள்ளைகள் பிரிந்து போய் விட்டார்கள். இரவல் காணிக்குள் சிறிய குடிசையமைத்துத்தான் குடியிருக்கிறேன். இதனால் நான் மிகுந்த மனவிரக்தியுடன் வாழ்ந்து வருகிறேன்.

எனது காணியை அபகரித்ததுமல்லாமல், தம்பியின் பிள்ளைகள் என்னை கேலி செய்வது வழக்கம். நானும் பொறுத்துப்பொறுத்து பார்த்தேன். 

அவர்களின் கேலி எல்லைமீறி சென்றதால், கடைசியில் பொறுமையிழந்து கொலையை செய்தேன் என பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை அதேயிடத்தை சோ்ந்த பாலசிங்கம் பாிதா என்ற 30 இளம் பெண் உயிாிழந்துள்ளதுடன், பாலசிங்கம் ஜெயபாலன் என்ற 35 குடும்பஸ்த்தா் படுகாயமடைந்துள்ளாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு