திட்டமிட்டு அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் தமிழா்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்..! இனமோதலுக்கு துபமிடும் பௌத்த பிக்கு.

ஆசிரியர் - Editor I
திட்டமிட்டு அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் தமிழா்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்..! இனமோதலுக்கு துபமிடும் பௌத்த பிக்கு.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு கொழும்பு அனுராதபுரம் வெலிஓயா பகுதியிலிருந்து

மூன்று பஸ்களிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள். சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர் அதேவேளை தற்போது மேலும் வெலிஓயா பிரதேசத்தில் இருந்து இரண்டு பேருந்துகளில் 

மக்களை அழைத்து அனைவருமாக ஆர்ப்பாடுடத்தில் ஈடுபட்டுள்ளனர் தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட பிக்குகள் 

குருகந்த ரஜமஹா விகாரை விகாராதிபதி கொலம்ப மேதாலங்க தேரர் மற்றும் 300 க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த போராடடத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

இந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவடட நீதிமன்று கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது 

இதேவேளை அனுமதியற்ற முறையில் நடப்படட விகாரை பெயர்ப்பலகை மற்றும் பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகை ஒன்று ஆகியன வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் அகற்றப்பட்டது 

இந்நிலையில் விகாரை பெயர்ப்பலகை அகற்றப்படடமை உள்ளிடட விடயங்கள் தொடர்பில் விகாரை வளாகத்தில் தற்போது இவர்கள் ஆர்ப்பாடுடத்தில் ஈடுபட்டுள்ளனர் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு