இந்து- பௌத்த ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசி பயனில்லை..! அத்துரலிய தேரருக்கு முகத்தில் அறைந்த செல்வம்..

ஆசிரியர் - Editor I
இந்து- பௌத்த ஒற்றுமை பற்றி வாய் கிழிய பேசி பயனில்லை..! அத்துரலிய தேரருக்கு முகத்தில் அறைந்த செல்வம்..

பௌத்தா்களும் இந்துக்களும் ஒன்றியைவேண்டும் என கூறுபவா்கள் முதலில் திருக்கேதீஸ்வரத்திலும், நீராவியடியிலும் அடாத்தாக புத்தா் சிலைகள் வைப்பதை நிறுத்தவேண்டும். 

மேற்கண்டவாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அத்துடன் நாட்டிலிருந்து பயங்கவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

பூரண ஒத்துழைப்பை வழங்கும். எனினும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை விடுக்கொடுக்கவோ அல்லது 

அவர்கள் மீது காழ்ப்புணர்வு கொள்ளவோ முடியாது. இத்தகைய கருத்துக்கள் இனவாதத்தைத் தூண்டும் முயற்சி என்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் 

நோக்கத்தைப் பின்னணியாகக் கொண்டவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு