வேக கட்டுப்பாட்டை இழந்த பாரவூா்தி கவிழ்ந்து விபத்து..!

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்த பாரவூா்தி கவிழ்ந்து விபத்து..!

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் கற்சிலைமடு வீதியில் பாரவூா்தி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் இருவா் காயமடைந்துள்ள நிலையில் விபத்து தொடா்பில் மேலும் தொியவருவதாவது, 

புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி இன்று காலை 9 15 மணி அளவில் எரு ஏற்றிக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 

வேக கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள காணிக்குள் தடம் புரண்டுள்ளதுஇந்த விபத்தில் லொறியில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் 

சிறிய காயங்களுக்கு உள்ளாகி ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

சம்பவ இடத்துக்குச் சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு