காணாமல்போன பாடசாலை மாணவி ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு..! பலகோணங்களில் விசாரணை தீவிரம்..

ஆசிரியர் - Editor I
காணாமல்போன பாடசாலை மாணவி ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு..! பலகோணங்களில் விசாரணை தீவிரம்..

கடந்த 3 நாட்களுக்கு முன்னா் காணாமல்போயிருந்த பாடசாலை மாணவி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

குறித்த சடலம் இன்று காலை 7.30 அளவில் கொக்கல்ல ஓயா நீர்த்தேக்கத்தின் அருகில் ஆற்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பதுளை இசுரு உயன மாவத்தை பகுதியை சேர்ந்த 19 வயதான லக்ஷிகா மதுவந்தி என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த யுவதி கடந்த 14ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்ததாக உறவினர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, கந்தகெட்டிய பொலிஸார், பிரதேச மக்களின் உதவியுடன் மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாணவியின் சில பொருட்கள் கொக்கலா ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் காணப்பட்ட நிலையில் பொலிஸார் அவற்றை மீட்டிருந்தனர்.

இதனையடுத்து அந்த பிரதேசத்தில் தேடுதல் நடத்தப்பட்டது. மூன்று நாட்களின் பின் இன்று காலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை கொண்டு வரும் ஆற்றின் கீழ் பகுதியில் மாணவியின் சடலம் சிக்கியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பதுளை நீதவான் முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், மாணவி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா 

என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு