முல்லைத்தீவுக்கு அழைத்துவரப்பட்ட பெருமளவு சிங்கள மக்கள்..! இனமோதலை உருவாக்க பிக்குகள் திட்டமா..?

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவுக்கு அழைத்துவரப்பட்ட பெருமளவு சிங்கள மக்கள்..! இனமோதலை உருவாக்க பிக்குகள் திட்டமா..?

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பகுதியில் பிள்ளையாா் ஆலயத்தை ஆக்கிரமித்து பௌத்த விகாரை கட்டியுள்ள பௌத்த பிக்கு அப்பகுதிக்கு 3 பேருந்துகளில் சிங்கள மக்களை அழைத்துவந்து இனவாதம் ஊட்டப்பட்டனா். 

பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மற்றும் மூன்று பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் இன்றையதினம் பொசன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 

5 க்கும் மேற்பட்ட பிக்குகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளனர்.அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகளால் உரையாற்றப்பட்டது . அதாவது இந்த பகுதியில் பிள்ளையார் ஆலய இருந்ததாக 

 தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் அழைத்து வரப்பட்ட சிங்கள மக்கள் 

மத்தியில் தேரர்களால் உரையாற்றப்பட்டது . இந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவடட நீதிமன்று கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு 

வழங்கபட்டுள்ள நிலையில் இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு இனவாத கருத்துக்கள் பௌத்த பிக்குகளால் போதிக்கப்பட்டுள்ளது .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு