குரூரமான வறட்சி..! செத்து மிதக்கும் மீன்கள்.

ஆசிரியர் - Editor I
குரூரமான வறட்சி..! செத்து மிதக்கும் மீன்கள்.

வவுனியா மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவும் நிலையில் குளங்களில் நீா்மட்டம் குறைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. 

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் வறட்சியான காலநிலை நீடிக்கின்றது.

இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக குறைவடைந்துள்ளதுடன் இதனால் மீன்களும் உயிரிழக்கின்றன.

குறிப்பாக புதுக்குளம், மூனாமடு குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக அதிகளவிலான நீர் பெறப்பட்டாலும், வெப்பமான காலநிலையால் நீர் வற்றியுள்ளது.

இதனால் அப்பகுதி குளத்தில் பெருந்தொகையான மீன்கள் இறந்துள்ளதுடன், கால்நடைகளும் நீரின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு