பேராற்றில் மணல் கொள்ளையா்கள் கொண்டாட்டம்..! பொலிஸாருக்கு தொியாதாம்.. இலஞ்ச விளையாட்டு.

ஆசிரியர் - Editor I
பேராற்றில் மணல் கொள்ளையா்கள் கொண்டாட்டம்..! பொலிஸாருக்கு தொியாதாம்.. இலஞ்ச விளையாட்டு.

முல்லைத்தீவு- பேராறு பகுதியில் தொடா்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துமாறு அப் பகுதி மக்கள் கேட்டுள்ளனா். 

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து எடுக்கப்பட்டு ஆற்றங்கரையிலே குவித்து வைக்கப்படுகிறது. இதன் பின் இரவு வேளையில் வரும் சிலர் மணலை வாகனங்களில் எடுத்து செல்கின்றனர்.

என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், பொலிஸாரும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் அவதானம் செலுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு