கத்திக்குத்துக்கு இளம் குடும்பத் தலைவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

ஆசிரியர் - Admin
கத்திக்குத்துக்கு இளம் குடும்பத் தலைவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

அம்பாறை - காரைதீவில் நேற்று மாலை 05:45 மணியளவில் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஒருவர் பலியானார். காயங்களுக்கு உள்ளான மற்றவர் ஆபத்தான நிலையில் காரைதீவு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாகவே இந்த கத்திகுத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் வடிவேல் வீதி காரைதீவு 12ல் வசிக்கும் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான ஞானசேகரம் ரதாஸ் (27 வயது) என்பவராவார். உயிர் இழந்த நபரின் சடலம் காரைதீவு வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் . சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு