தீவிரவாதியின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிா்ப்பு..! டயா்களை கொழுத்தியதால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
தீவிரவாதியின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிா்ப்பு..! டயா்களை கொழுத்தியதால் பதற்றம்..

மட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது தாக்குதல் நடாத்திய தற்கொலை தீவிரவாதியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்பு தொிவித்து மட்டக்களப்பு பாரதி வீதியில் உள்ள மக்கள் கடுமையான எதிா்ப்பு தொிவித்து ஆா்ப்பாட்டம் நடாத்தியுள்ளனா். 

இன்று காலை குறித்த பகுதியில் சீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை புதைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் 

மாநகரசபை உறுப்பினர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். வீதிகளில் டயர்களை எரித்தும் வீதிகளை மறித்தும் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

சீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை மட்டக்களப்பில் புதைப்பதற்கான நடவடிக்கையில் பொலிஸார் நடவடிக்கைகள் முன்னெடுத்துவரும் நிலையில் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு