முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பதில் சிங்கள தலைவா்கள் ஒற்றுமை..!

ஆசிரியர் - Editor I
முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பதில் சிங்கள தலைவா்கள் ஒற்றுமை..!

போா் இடம்பெற்ற காலத்தில் நடைபெற்ற இழப்புக்களை மறைக்கும் விடயத்தில் சிங்கள அரசியல்வாதிகள் மிக ஒற்றுமையாக செயற்பட்டுவருவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாா். 

மேலும், இழப்புக்களின் உண்மையான தரவுகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “எவ்வாறு ஒரு பிரச்சினையென்று வரும்போது முஸ்லிம் தலைவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டார்களோ, அவ்வாறே போர்க்காலத்தில் நடந்த இழப்புக்களை மூடி மறைக்க சிங்கள அரசியல்வாதிகள் ஒன்றுமையாக செயற்பட்டு வருவகின்றனர். 

மேலும் எம்மில் சிலர் தமது பிரத்யேக நலனுக்காக பேரினவாதிகளுடன் இணைந்து செயற்படுகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு