இரு பிள்ளைகளுடன் ரயில் முன்னால் பாய்ந்த இளம் தாய்..! பலகோணங்களில் விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
இரு பிள்ளைகளுடன் ரயில் முன்னால் பாய்ந்த இளம் தாய்..! பலகோணங்களில் விசாரணைகள் தீவிரம்..

கொழும்பில் நேற்றய தினம் இரவு தாய் ஒருவரும், இரு பிள்ளைகளும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ள நிலையில், பல்வேறு கோணங்களில் பொலிஸாா் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனா். 

இந்த சம்பவம் கொள்பிட்டி - பம்பலப்பிட்டி இடையில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இளம் தாய் ஒருவரும் இரண்டு மகன்மாருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இந்த அனர்த்தம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஜெனட் தர்ஷனி ராமைய்யா என்ற 35வயது மதிக்கத்தக்க 

பெண்ணும் அவரது 10 மற்றும் 11 வயதுடைய மகன்களுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் வாழ வழியின்றி இவ்வாறு 

தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரதும் உடல் சிதறிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அவரது தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து சற்று தூரத்தில் கிடந்த பையில் “எங்களுக்கு வாழ வழியில்லை” என எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு