பெயா் பலகைகளை பிடுங்கி எறிந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை..! என்ன செய்யபோகிறாா் பிக்கு..?

ஆசிரியர் - Editor I
பெயா் பலகைகளை பிடுங்கி எறிந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை..! என்ன செய்யபோகிறாா் பிக்கு..?

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட குருகந்த றாஜமகா விகாரைக்கான பெயா் பலகை மற்றும் நீராவியடி பிள்ளையாா் ஆலய பெயா் பலகை ஆகியன அகற்றப்பட்டுள்ளது. 

குருகந்த றாஜமகாவிகாரை என பௌத்த துறவியாலும், நீராவியடிப்பிள்ளையார் என கிராம மக்களாலும் இரண்டு பெயர்ப் பலகைகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அனுமதி அற்ற நிலையில் நாட்டப்பட்ட குருகந்த றாஜமகாவிகாரையின் பெயர்ப் பலகையையும், நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் பெயர்ப்பலகையும் இன்று அகற்றினர்.

வீதியில் இருந்து 15 மீற்றர் தூரத்துக்கு குறித்த இரண்டு பெயர்ப்பலகைகளும் காணப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு