விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய பசுமாடு..! காப்பாற்றிய இளைஞா்கள்..

ஆசிரியர் - Editor I
விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய பசுமாடு..! காப்பாற்றிய இளைஞா்கள்..

திருகோணமலை- கந்தளாய் பகுதியில் வீதியில் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய மாட்டை அப்பகுதியால் சென்ற இளைஞா்கள் காப்பாற்றியிருக்கின்றனா். 

இந்தச் சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.திருகோணமலை கந்தளாய் வீதியில் விபத்துக்குள்ளான மாடு பலமணி நேரம் உயிருக்கு போராடி தாகத்துடன் 

கிடந்துள்ளது. அதே நேரம் வீதியால் சென்ற இளைஞர்கள் சிலர் மாட்டை மீட்டு, குளிப்பாட்டி அதன் தாகத்தையும் தீர்த்து, 

மிருகவைத்தியரை அழைத்து உரிய சிகிச்சையளித்தனர். பின்னர் மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு