வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்பு தொடா்பில் கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்பு தொடா்பில் கலந்துரையாடல்..

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்ட  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்குசொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளின் விடுவிப்பு 

தொடர்பிலும் ஆராயப்பட்டது. மேலும் இந்த விஜயத்தின்போது கௌரவ ஆளுநர் அவர்கள் பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி ஆகியவற்றிற்கும் 

விஜயத்தினை மேற்கொண்டு பாடசாலைகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன் மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின்போது வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் மற்றும் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு