ஆவா குழுவுடன் தொடா்புளை பேணியதால் தனு ரொக் குழு தாக்குதல் நடாத்தியது..! பொலிஸாா் தகவல்..

ஆசிரியர் - Editor I
ஆவா குழுவுடன் தொடா்புளை பேணியதால் தனு ரொக் குழு தாக்குதல் நடாத்தியது..! பொலிஸாா் தகவல்..

யாழ்.கொக்குவில் புகைரத நிலைய பொறுப்பதிகாாி ஆவா குழுவுடன் தொடா்புகளை பேணியதாக கூறி தனு ரொக் குழு புகைரத நிலைய பொறுப்பதிகாாி மீது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸாா் கூறுகின்றனா். 

இந்தச் சம்பவம் கொக்குவில் சந்திக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்றது. கொக்குவில் சந்திக்கு அண்மையாக உள்ள முச்சக்கர வண்டித் திருத்தகத்தில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி நின்றுள்ளார். 

அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், அவரைத் தாக்கியுள்ளது. தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

ஆவா குழுவைச் சேர்ந்த சிலர் பொழுதைக் கழிப்பதற்காக கொக்குவில் ரயில் நிலையத்துக்குச் சென்று இருப்பார்கள். அவர்களுக்கு இடம் கொடுத்து நட்புவைத்திருந்தமைக் குறிப்பிட்டே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரியைத் தாக்கியவர்கள் தனுரொக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, சம்பவத்தை அடுத்து கொக்குவில் சந்தியை அண்மித்த பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு